search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலர் கண்காட்சி"

    • ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 21-ந்தேதி தொடங்கியது.
    • இந்த நிலையில் கோடை விழா முடிந்தும் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    சேலம்:

    ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 21-ந்தேதி தொடங்கியது. விழா வில், சுற்றுலா துறை, நகராட்சி நிர்வாகம், வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை பரா மரிப்புத்துறை, மீன்வ ளத்துறை உள்பட 42 துறைகள் சார்பில் அரங்கு கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் ஏற்காடு பூங்காவில் 5 லட்சம் மலர்களை கொண்டு மலர் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

    நேற்று முன்தினம் (28-ந்தேதி) வரை ஒரு வாரம் கோடை விழா, மலர் கண்காட்சி நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்கத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் விழாவில் பங்கேற்றனர்.

    இந்த நிலையில் கோடை விழா முடிந்தும் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு இடங்களில் இருந்து, குடும்பத்துடன் ஏற்காட்டுக்கு வருகின்றனர்.

    கோடை விழாவிற்காக பூங்காவில் பல்வேறு பூக்களால் வடி வமைக்கப்பட்ட டிராகன் உருவம், பொன்னியின் செல்வன் கப்பல், முயல் உருவம், மலர் படுக்கை, மலர் வளையங்கள், செல்பி பாய்ண்ட், சங்க கால மலர்கள், குடில்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் பிரிக்கப்படாமல் அப்ப டியே உள்ளது. அதனை பார்வையிட சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் ஏற்காடு ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்கின்றனர். இன்று வேலை நாள் என்ற போதி லும் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கா னோர் குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்தனர். இதனால் ஏற்காடு சுற்றுலா தலம் களை கட்டியது.

    • கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சி தொடங்கியது.
    • 200க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த 5 லட்சம் வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

    ஊட்டி:

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தலமாகும். இங்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து கொண்டே இருப்பார்கள்.

    குறிப்பாக கோடை சீசனுக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அப்படி கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாகவும், பொழுதை போக்கும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கண்காட்சிகளும், போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கண்காட்சி கடந்த 6-ந் தேதி கோத்தகிரி நேருபூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, படகு போட்டிகளும் நடத்தப்பட்டது.

    கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று ஊட்டி தாவரவியல் பூங்கா வில் 125-வது மலர் கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் அம்ரித், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உள்பட அதிகாரிகளும் பங்கேற்றனர். இன்று தொடங்கிய கண்காட்சி வருகிற 23-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

    மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக பல ஆயிரம் கொய்மலர்களை கொண்டு 10 மலர் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தது. சுற்றுலா பயணிகள் அலங்கார வளைவுகள் வழியாக சென்று மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.

    மலர் கண்காட்சிக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஓரியண்டல் லில்லி, ஏசியா டிக் லில்லி, கேலஞ்சியோடு, இன்கா மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, பிளாக்ஸ், பெட்டுனியா, சால்வியா, பெகோனியா, செம்பா, புளோரன்ஸ், கிரைசாந்திமம் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

    இதேபோல் நடைபாதை ஒரங்கள், மலர் பாத்திகளிலும் 200க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த 5 லட்சம் வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

    இந்த ஆண்டு மலர் கண்காட்சியில் சிறப்பு அம்சமாக ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு 18 அடி உயரம், 40 அடி அகலத்தில் தேசிய பறவையான மயில் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக குழந்தைகளை மிகவும் இந்த மயில் உருவம் கவர்ந்திழுத்தது. சுற்றுலா பயணிகள் அதன் முன்பு நின்று செல்பி புகைப்படம் எடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனர்.

    இதுதவிர தமிழ்நாட்டின் மாநில சின்னங்களான வரையாடு, மரகதப்புறா, பனைமரம் போன்ற சிற்பங்களும் பல ஆயிரம் வண்ண மலர்களால் உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. பல வண்ண மலர் கோபுரங்களும் உருவாக்கப்பட்டு இருந்தது.

    தாவரவியல் பூங்கா உருவாகி 175 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் வகையில், 175-வது ஆண்டு தாவரவியல் பூங்கா, 125வது மலர் கண்காட்சி என மலர்களால் உருவான வாசகங்களும் இடம் பெற்றிருந்தது.

    சிறுவர்கள் குழந்தைகளை கவரும் வண்ணம் யானை, முயல், மயில் போன்ற வடிவங்களும் வடிவமைத்து இருந்தனர். ஊட்டியின் 200-வது வயதை கொண்டாடும் விதமாக ஊட்டி 200 சின்னம், மஞ்சப்பை விழிப்புணர்வு உருவம் என பலவகையான அலங்காரங்கள் பல ஆயிரம் வண்ண மலர்களை கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது.

    இதுதவிர அரசுத்துறை மற்றும் தனியார்த்துறை சார்பில் அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் அனை வரும் கண்காட்சியில் இடம் பெற்ற மலர்களால் உருவான சிற்பங்களை கண்டு ரசித்ததுடன் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் திரண்டதால் ஊட்டியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் ஊட்டி முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    • ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் தற்போது குளுகுளு சீசன் நிலவி வருகிறது.
    • கொடைக்கானலில் கோடை விழா வருகிற 26-ந்தேதி 60-வது மலர் கண்காட்சியுடன் தொடங்குகிறது.

    கொடைக்கானல்:

    'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது குளுகுளு சீசன் நிலவி வருகிறது. இதையொட்டி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கொடைக்கானலில் நடந்தது. இதற்கு ஆர்.டி.ஓ. ராஜா தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் பெருமாள்சாமி, உதவி இயக்குனர் சைனி, தோட்டக்கலை அலுவலர்கள் பார்த்தசாரதி, சிவபாலன், தாசில்தார் முத்துராமன், சுற்றுலா அலுவலர் சுதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் ஆர்.டி.ஓ. ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொடைக்கானலில் கோடை விழா வருகிற 26-ந்தேதி 60-வது மலர் கண்காட்சியுடன் தொடங்குகிறது. இதில் 3 நாட்கள் மலர் கண்காட்சியும், 8 நாட்கள் கோடை விழாவும் நடைபெறுகிறது. அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி நிறைவு விழா நடைபெறுகிறது. மலர் கண்காட்சியினை தமிழக அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். விழாவில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட கலெக்டர், பல்வேறு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். கோடை விழாவில் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், படகு போட்டிகள், நாய் கண்காட்சி, படகு அலங்காரப் போட்டி ஆகியவை நடைபெற உள்ளது. விழா நடைபெறும் நாட்களில் பிரையண்ட் பூங்கா இரவு 7 மணி வரை திறந்து இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆண்டுதோறும் வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
    • இறுதியாக 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது.

    கோவை,

    கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 11 ஆண்டுக்கு பின், மீண்டும் மலர் கண்காட்சியை வருகிற ஆகஸ்டு மாதம் நடத்த பல்கலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    முன்பு ஆண்டுதோறும் வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். உள்நாட்டில் அனைத்து ரக மலர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் மலர்கள் வரவழைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படும். இக்கண்காட்சியில் பல்வேறு அரிய மலர்களை காணமுடியும்.பல்கலைக்கழகத்தில் இறுதியாக 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. மலர் கண்காட்சி நடத்துவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அந்நிகழ்ச்சிக்கு அப்போதைய துணைவேந்தர்கள் பெரிதாக ஆர்வம் காட்டாமல் நிறுத்தப்பட்டது.

    தற்போது மீண்டும் மலர் கண்காட்சி பிரமாண்டமாக நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கவும், மலர்கள் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இக்கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சிக்காக பல்கலைக்கழகத்தில் பல்ேவறு பணிகள் நடந்து வருகின்றன.

    துணைவேந்தர் கீதா லட்சுமியிடம் கேட்டபோது பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்டு மாதம் மலர் கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்றார்.

    ×